பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
493

292

292. விதியுடை யாருண்க வேரி
        விலக்கலம் அம்பலத்துப்
    பதியுடை யான்பரங் குன்றினிற்
        பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
        வேறு கருதுநின்னின்
    மதியுடை யார்தெய்வ மேயில்லை
        கொல்இனி வையகத்தே.