பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
494

293

293. மனக்களி யாய்இன் றியான்மகிழ்
        தூங்கத்தன் வார்கழல்கள்
    எனக்களி யாநிற்கும் அம்பலத்
        தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
        ரொருவர்செவ் வாய்ப்பசிய
    புனக்கிளி யாங்கடி யும்வரைச்
        சாரற் பொருப்பிடத்தே.