பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
500

298

298. என்கடைக் கண்ணினும் யான்பிற
        வேத்தா வகையிரங்கித்
    தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
        சங்கரன் தாழ்கயிலைக்
    கொன்கடைக் கண்தரும் யானை
        கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
    முன்கடைக் கண்ணிது காண்வந்து
        தோன்றும் முழுநிதியே.