பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
162

30

30. குயிலைச் சிலம்படிக் கொம்பினைக்
        தில்லையெங் கூத்தப்பிரான்
   கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
        காக்குங் கருங்கட்செவ்வாய்
   மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
        வருவன்வண் பூங்கொடிகள்
 
   பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
        நண்ணும் பளிக்கறையே.