பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
508

304

304. தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
        சிற்றம் பலம்அனையாள்
    தெய்வம் பணிந்தறி யாள்என்று
        நின்று திறைவழங்காத்

    தெவ்வம் பணியச்சென் றாலுமன்
        வந்தன்றிச் சேர்ந்தறியான்
    பௌவம் பணிமணி யன்னார்
        பரிசின்ன பான்மைகளே.