304. தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள் தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே.