306. மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூவலன் னாளுமற் றோர்தெய்வ முன்னலளே.