313. சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத் தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன் உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின் துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே.