315. நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத் திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே.