317. பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர் வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல் துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே.