320. சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று பெற்றவ ளேயெனைப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழீஇ மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே.