321. புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண் சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள் பரமன் றிரும்பனி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ் சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே.