327. புயலோங் கலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ் செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே.