பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
537

327

327. புயலோங் கலர்சடை ஏற்றவன்
        சிற்றம் பலம்புகழும்
    மயலோங் கிருங்களி யானை
        வரகுணன் வெற்பின்வைத்த
    கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
        கோபமுங் காட்டிவருஞ்
    செயலோங் கெயிலெரி செய்தபின்
        இன்றோர் திருமுகமே.