பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
545

332

332. முனிவரும் மன்னரும் முன்னுவ
        பொன்னான் முடியுமெனப்
    பனிவருங் கண்பர மன்திருச்
        சிற்றம் பலமனையாய்
    துனிவரு நீர்மையி தென்னென்று
        தூநீர் தெளித்தளிப்ப
    நனிவரு நாளிது வோவென்று
        வந்திக்கும் நன்னுதலே.