335. வானக்கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர் போற் கானக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள் மானக் கனகந் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்குந் தேனக்க தார்மன்ன னென்னோ இனிச்சென்று தேர்பொருளே.