பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
549

336

336. சுருடரு செஞ்சடை வெண்சுட
        ரம்பல வன்மலயத்
    திருடரு பூம்பொழில் இன்னுயிர்
        போலக் கலந்திசைத்த
    அருடரு மின்சொற்க ளத்தனை
        யும்மறந் தத்தஞ்சென்றோ
    பொருடரக் கிற்கின் றதுவினை
        யேற்குப் புரவலரே.