பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
551

338

338. தென்மாத் திசைவசை தீர்தரத்
        தில்லைச்சிற் றம்பலத்துள்
    என்மாத் தலைக்கழல் வைத்தெரி
        யாடும் இறைதிகழும்
    பொன்மாப் புரிசைப் பொழில்திருப்
        பூவணம் அன்னபொன்னே
    வன்மாக் களிற்றொடு சென்றனர்
        இன்றுநம் மன்னவரே.