338. தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும் பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே.