341. சேணுந் திகழ்மதிற் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ் சூணுந் திருத்து மொருவன் திருத்தும் உலகினெல்லாங் காணுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே.