பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
558

344

344. தீமே வியநிருத் தன்திருச்
        சிற்றம் பலம்அனைய
    பூமே வியபொன்னை விட்டுப்பொன்
        தேடியிப் பொங்குவெங்கான்
    நாமே நடக்க வொழிந்தனம்
        யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
    வாமே கலையைவிட் டோபொருள்
        தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.