பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
559

345

345. தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
        பலஞ்சிந்தி யாதவரிற்
    பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
        எய்தப் பனித்தடங்க
    ணுண்ணீர் உகவொளி வாடிட
        நீடுசென் றார்சென்றநாள்
    எண்ணீர் மையின்நில னுங்குழி
        யும்விர லிட்டறவே.