350. யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே சூழுந் தொகுநிதி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே.