பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
564

350

350. யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
        றம்பலத் தானமைத்த
    ஊழின் வலியதொன் றென்னை
        ஒளிமே கலையுகளும்
    வீழும் வரிவளை மெல்லியல்
        ஆவிசெல் லாதமுன்னே
    சூழுந் தொகுநிதி யோடன்பர்
        தேர்வந்து தோன்றியதே.