355. தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற் பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய் பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே.