பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
573

355

355. தேவா சுரரிறைஞ் சுங்கழ
        லோன்தில்லை சேரலர்போல்
    ஆவா கனவும் இழந்தேன்
        நனவென் றமளியின்மேற்
    பூவார் அகலம்வந் தூரன்
        தரப்புலம் பாய்நலம்பாய்
    பாவாய் தழுவிற் றிலேன்விழித்
        தேனரும் பாவியனே.