பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
575

357

357. பூங்குவ ளைப்பொலி மாலையும்
        ஊரன்பொற் றோளிணையும்
    ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
        கொள்கநள் ளார் அரணந்
    தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
        சிற்றம் பலத்தயல்வாய்
    ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
        தோமன் உறாவரையே.