பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
576

358

358. தவஞ்செய் திலாதவெந் தீவினை
        யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
    தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
        நோவதென் அத்தன்முத்தன்
    சிவன்செய்த சீரரு ளார்தில்லை
        யூரநின் சேயிழையார்
    நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
        தொடல்விடு நற்கலையே.