பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
578

359

359. தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
        தாங்கித் தளர்மருங்குல்
    பிணியுறப் பேதைசென் றின்றெய்து
        மால்அர வும்பிறையும்
    அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
        லாயநல் லார்கண்முன்னே
    பணியுறத் தோன்றும் நுடங்கிடை
        யார்கள் பயின்மனைக்கே.