366. செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம் மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள் இவ்வா றருள்பிறர்க் காகு மெனநினைந் தின்னகையே.