பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
591

371

371. அரமங் கையரென வந்து
        விழாப்புகும் அவ்வவர்வான்
    அரமங் கையரென வந்தணு
        கும்மவ ளன்றுகிராற்
    சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
        சிற்றம் பலம்வழுத்தாப்
    புரமங் கையரின்நை யாதைய
        காத்துநம் பொற்பரையே.