பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
594

373

373. இறுமாப் பொழியுமன் றேதங்கை
        தோன்றினென் னெங்கையங்கைச்
    சிறுமான் தரித்தசிற் றம்பலத்
        தான்தில்லை யூரன்திண்டோள்

பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
        குப்பெற்ற பெற்றியினோ
    டிறுமாப் பொழிய இறுமாப்
        பொழிந்த இணைமுலையே.