பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
595

374

374. வேயாது செப்பின் அடைத்துத்
        தமிவைகும் வீயினன்ன
    தீயாடி சிற்றம்பலமனை
        யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
        கண்ணிங்ங னேமறைத்தாள்
    யாயா மியல்பிவள் கற்புநற்
        பால வியல்புகளே.