பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
600

378

378. அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
        பலவர்அந் தண்கயிலை
    மஞ்சார் புனத்தன்று மாந்தழை
        யேந்திவந் தாரவரென்
    நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
        நனவு கனவுமுண்டேற்
    பஞ்சா ரமளிப் பிரிதலுண்
        டோவெம் பயோதரமே.