379. தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான் கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள் உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும் பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே.