38. காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால் வாம்பிணை யால்வல்லி யொல்குத லால்மன்னு மம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே.