பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
170

38

38. காம்பிணை யாற்களி மாமயி
        லாற்கதிர் மாமணியால்
   வாம்பிணை யால்வல்லி யொல்குத
        லால்மன்னு மம்பலவன்

   பாம்பிணை யாக்குழை கொண்டோன்
        கயிலைப் பயில்புனமுந்
 
   தேம்பிணை வார்குழ லாளெனத்
        தோன்றுமென் சிந்தனைக்கே.