381. கயல்வந்த கண்ணியர் கண்ணினை யால்மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின் அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம்நிலவு புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே.