382. கூற்றாயினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தாற் போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற் றீற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத் தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே.