பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
606

383

383. வியந்தலை நீர்வையம் மெய்யே
        யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
    வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
        வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
        அரனிருக்கும்பொருப்பிற்
    கயந்தலை யானை கடிந்த
        விருந்தினர் கார்மயிலே.