பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
608

384

384. தேவியங் கண்திகழ் மேனியன்
        சிற்றம் பலத்தெழுதும்
    ஓவியங் கண்டன்ன வொண்ணு
        தலாள் தனக் கோகையுய்ப்பான்
    மேவியங் கண்டனை யோவந்
        தனனென வெய்துயிர்த்துக்
    காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
        வௌவுதல் கற்றனவே.