பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
616

391

391. செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
        பலவர்சில் லைநகரோர்
    பந்தார் விரலியைப் பாய்புன
        லாட்டிமன் பாவியெற்கு
    வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
        மாறென் வளமனையிற்
    கொந்தார் தடந்தோள் விடங்கால்
        அயிற்படைக் கொற்றவரே.