393. செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே.