பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
622

396

396. கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
        மார்களைக் கண்பிழைப்பித்
    தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
        தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
        யீசர்வண் தில்லைநல்லார்
    பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
        எம்மைப் பூசிப்பதே.