397. சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண் மலைமலி மார்பி னுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே.