பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
626

399

399. ஐயுற வாய்நம் அகன்கடைக்
        கண்டுவண் டேருருட்டும்
    மையுறு வாட்கண் மழவைத்
        தழுவமற் றுன்மகனே.

    மெய்யுற வாம்இதுன் னில்லே
        வருகெனவெள்கிச்சென்றாள்
    கையுறு மான்மறி யோன்புலி
        யூரன்ன காரிகையே.