44. குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன் றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த அருநா ணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே.