பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
177

44

44. குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
        கூத்தனை யேத்தலர்போல்
   வருநாள் பிறவற்க வாழியரோ
      மற்றென் கண்மணிபோன்
   றொருநாள் பிரியா துயிரிற்
        பழகி யுடன்வளர்ந்த
   அருநா ணளிய வழல்சேர்
        மெழுகொத் தழிகின்றதே.