பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
179

46

46. நீங்கரும் பொற்கழற் சிற்றம்
        பலவர் நெடுவிசும்பும்
   வாங்கிருந் தெண்கடல்வையமு
        மெய்தினும் யான்மறவேன்
   தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
        தேனும் பொதிந்துசெப்புங்
   கோங்கரும் புந்தொலைத் தென்னையு
        மாட்கொண்ட கொங்கைகளே.