பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
180

47

47. சூளா மணியும்பர்க் காயவன்
        சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
   காளா யொழிந்ததென்னாருயிர்
        ஆரமிழ் தேயணங்கே

   தோளா மணியே பிணையே
        பலசொல்லி யென்னை துன்னும்
   நாளார் மலர்ப்பொழில் வாயெழி
        லாயம் நணுகுகவே.