பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
185

50

50. எளிதன் றினிக்கனி வாய்வல்லி
        புல்ல லெழின்மதிக்கீற்
   றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
      பிரானையுன் னாரினென்கண்
   தெளிசென்ற வேற்கண் வருவித்த
        செல்லலெல் லாந்தெளிவித்
   தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
        வாழி யறிவிப்பனே.