51. குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண் உவளைத் தனதுயி ரென்றது தன்னோ டுவமையில்லா தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தா னருளிலர்போல் துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே.