பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
189

53

53. கருங்கண் ணனையறி யாமைநின்
        றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
   வருங்கண் ணனையவண் டாடும்
        வளரிள வல்லியன்னீர்
   இருங்கண்ணனைய கணைபொரு
        புண்புண ரிப்புனத்தின்
   மருங்கண் ணனையதுண் டோவந்த
        தீங்கொரு வான்கலையே.