பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
195

58

58. வின்னிற வாணுதல் வேனிறக்
        கண்மெல் லியலைமல்லல்
   தன்னிற மொன்றி லிருத்திநின்
        றோன்றன தம்பலம்போல்
   மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
        வெண்ணகைப் பைந்தொடியீர்
   பொன்னிற வல்குலுக் காமோ
        மணிநிறப் பூந்தழையே.