59. கலைக்கீ ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற் றாதன் றிலங்கையர்கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச் சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே.