பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
196

59

59. கலைக்கீ ழகலல்குற் பாரம
        தாரங்கண் ணார்ந்திலங்கு
   முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
        றாதன் றிலங்கையர்கோன்

   மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
        பலவர்வண் பூங்கயிலைச்
   சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
 
        எதுநுங்கள் சிற்றிடையே.