பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
199

61

61. ஆழமன் னோவுடைத் திவ்வையர்
        வார்த்தை யனங்கன்நைந்து
   வீழமுன் னோக்கிய வம்பலத்
        தான்வெற்பி னிப்புனத்தே
   வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
        வாய்ப்பின்னும் மென்றழையாய்
   மாழைமென் னோக்கி யிடையாய்க்
        கழிந்தது வந்துவந்தே.