பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
206

65

65. பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
        செய்யிற் பிறவியென்னும்
   முழைகொண் டொருவன்செல் லாமைநின்
        றம்பலத் தாடுமுன்னோன்
   உழைகொண் டொருங்கிரு நோக்கம்
        பயின்றஎம் மொண்ணுதல்மாந்
   தழைகொண்டொருவனென் னாமுன்ன
        முள்ளந் தழைத்திடுமே.